மச்ச அவதாரம்

சத் யுகத்தின் தொடக்கத்தில் ஒரு பெரிய மீனின் வடிவத்தில் அவதரித்தார் விஷ்ணு பகவான். ஒரு மிகப்பெரிய வெள்ளப்பெருக்கின் போது, மச்ச அல்லது மீனின் அவதாரத்தை எடுத்த விஷ்ணு பகவான் படகில் இருந்து மனு மற்றும் பிற உயிர்களையும் காப்பாற்றினார். மனு என்பவர் இந்த உலகத்தின் முதல் மனிதன். அவன் மூலமாக தான் மனித இனம் பெருகியது என்று நம்பப்படுகிறது. இந்த பெரிய வெள்ளத்தின் போது, இந்த உலகத்தில் உள்ள மீனின் வகைகள் ஒவ்வொன்றிலும் ஒன்றை எடுத்துக் கொண்டு அவன் படகில் போட்டு கொண்டான். அவன் புதிய உலகிற்கு பயணிக்க மீனின் வடிவத்தில் இருந்த விஷ்ணு பகவான் உதவினார்.

கூர்ம அவதாரம்

விஷ்ணு பகவான் கூர்ம அல்லது ராட்சச ஆமை வடிவத்தின் மூலமாக தன் இரண்டாம் அவதாரத்தை எடுத்தார். பாற்கடலை கடைவதற்கு மந்திரசாலா மலை கடையும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் அந்த பாற்கடல் மிகவும் ஆழமாக இருந்ததால், மந்திரசாலா மலை கடலில் மூழ்க தொடங்கியது. அப்போது ராட்சச ஆமை வடிவத்தை எடுத்த விஷ்ணு பகவான் அந்த மலையை தன் தோல் மீது சுமந்து கொண்டார்.

வராக அவதாரம்

விஷ்ணு பகவானின் மூன்றாம் அவதாரம் இது. வராக என்ற வார்த்தைக்கு காட்டு பன்றி என்ற அர்த்தமாகும். அண்டத்துக்குரிய பகுதியின் கீழ் இந்த உலகத்தை எடுத்துச் சென்ற ஹிரன்யக்ஷா என்ற அரக்கனிடம் கொல்லவே விஷ்ணு பகவான் இந்த அவதாரத்தை எடுத்தார். ஹிரன்யக்ஷாவை வராக வடிவத்தின் மூலம் கொன்ற பிறகு, இந்த உலகத்தை மீண்டும் அது இருந்த இடத்திலேயே வைத்தார் விஷ்ணு பகவான்.

நரசிம்ம அவதாரம்

விஷ்ணு பகவானின் கடுஞ்சினமான அவதாரம் இது. நரசிம்மா என்றால் பாதி மனிதன் பாதி சிங்கம். சத் யுகத்தில் ஹிரன்யகஷிபு என்ற அரக்கனை கொல்ல விஷ்ணு பகவான் இந்த அவதாரத்தை எடுத்தார். தன்னை எந்த ஒரு மனிதன் அல்லது விலங்கினாலும், வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும், பகலிலும் இரவிலும், பூமியிலும் ஆகாயத்திலும், எந்த ஒரு ஆயுதத்தை கொண்டும் தன்னை கொல்ல முடியாது என்ற வரத்தை பெற்றிருந்தான். அதனால் பாதி மனிதன் பாதி சிங்க உருவத்தை எடுத்த விஷ்ணு பகவான், பொழுது சரியும் நேரம், அந்த அரக்கனின் வீட்டில், அவனை தன் மடியில் போட்டு தன் நகத்தினால் கொன்றார்.

வாமண அவதாரம்

திரேட்டா யுகத்தில் இந்த அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். ஒரு முறை பாலி என்ற அசுர அரசன் இந்த உலகத்தை ஆண்டு வந்தான். மிகவும் சக்தி வாய்ந்து விளங்கிய அவன் மூவுலகத்தின் மீதும் வலுக்கட்டாயமாக தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தான். இருப்பினும் தர்ம காரியங்களின் மீது நம்பிக்கை கொண்ட நல்லதொரு அரசனாகவே இருந்தான். அதனால் வாமண அல்லது குள்ள பிராமிண மனித அவதாரத்தை எடுத்த விஷ்ணு பகவான் அவனிடம் மூன்றடி நிலத்தை கேட்டார். இதற்கு பாலி ஒப்புக்கொண்டான். கடவுள் தன் காலடியை எடுத்து வைத்த உடனேயே, ஆகாயம் மற்றும் கீழ் உலகத்தை எடுத்துக் கொண்டார். அது விஷ்ணு பகவான் என்று உணர்ந்த பாலி, அவர் அடுத்த எட்டை எடுத்து வைக்க தன் தலையை கொடுத்தான். பாலியின் தலை மீது விஷ்ணு பகவான் கால் வைத்த உடனேயே உலகத்திற்குள் நுழைந்து மோட்சத்தை பெற்றான் பாலி.

பரசுராம அவதாரம்

இந்து மதத்தில், பரசுராம் என்பவன் முதல் ஷத்ரிய பிராமிணன் ஆகும். அராஜகம் செய்து வந்த ஷத்ரியர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவே பரசுராமன் அவதரித்தார். சிவபெருமானை வழிப்பட்ட பரசுராமன், ஒரு கோடாரியை பரிசாக பெற்றான். அதனை வைத்து ஷத்ரிய வம்சத்தையே இந்த உலகத்தை விட்டு துடைத்து எடுத்தான்.

 

ராம அவதாரம்

அயோத்யாவின் இளவராசான ராமர் அசுர அரசரான ராவணனை அழித்தார். ராமரின் மனைவியை ராவணன் இலங்கைக்கு தூக்கி சென்ற போது, அவளை தேடி ராமர் வந்தார். பெரிய ஒரு போருக்கு பிறகு, ராவணனை வீழ்த்தி நல்லொதொரு ஆட்சியை அமைத்தார்.

கிருஷ்ண அவதாரம்

கிருஷ்ண அவதாரம் விஷ்ணு பகவானின் புகழ் பெற்ற ஒரு அவதாரமாகும். ட்வபரா யுகத்தின் போது கிருஷ்ணர் வடிவத்தில் தன் அவதாரத்தை எடுத்தார் விஷ்ணு பகவான். தீய அரசனான கம்சனை கொல்வதற்காகவே அவர் கிருஷ்ணனாக பிறந்தார். இந்த அரசன் கிருஷ்ணனின் தாய்மாமன் என்பது குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தில் கிருஷணரே முக்கியமான பங்கை வகித்தார். அர்ஜுனனுக்கு குருவாக இருந்து, குருக்ஷேத்திர போரில் பாண்டவர்கள் வெற்றி பெற உதவினார்.

வைகுண்ட அவதாரம்

அய்யா வைகுண்ட அவதாரம் அல்லது வைகுண்ட ஜெயந்தி ( தமிழ் : அய்யா வைகுண்ட அவதாரம் அல்லது வைகுண்ட ஜெயந்தி – வைகுண்ட ஜெயந்தியின் அவதாரம் ) என்பது தமிழ் மாதமான மாசியின் 20 வது நாளில் அய்யாவழி பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும். பகவான் நாராயணனே இவ்வுலக மக்களின் மேன்மைக்காக பத்தாவது அவதாரமாக திருச்செந்தூர் கடலில் மகர கருவறையில் அரூபமாய் ஆதிநாராயணருக்கும் திருமகள் மகாலெட்சுமிக்கும் மகனாக வைகுண்டராக அவதரித்தார் என்று கூறப்படுகிறது. கொல்லம் ஆண்டு 1008 அன்று தமிழ் மாத மாசி 20 ஆம் தேதி (கிபி 1 மார்ச் 1833, வெள்ளிக்கிழமை) திருச்செந்தூர் கடலில் இருந்து எழுந்தார். கலியின் தீய சக்தியை அழித்து கலியுகத்தை தர்ம யுகமாக மாற்ற கடலோரம் உள்ள தருவையூரில் நாராயண பண்டாரமாக மனித உருவம் எடுத்தார்.